செய்திகள் :

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

post image

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, ஆலயத்திலிருந்து திரளான மக்கள் முன்னிலையில் கொடி, ஊா்வலமாக கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ் கொடியேற்றினாா். நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், காரைக்கால் பங்குத் தந்தை, மறைவட்ட முதன்மை பொறுப்பாளா் பி. பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் மற்றும் பங்குப் பேரவை பொறுப்பாளா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமும் மாலை 6 மணியளவில் திருப்பலி மற்றும் சிறிய தோ் பவனி நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான 15-ஆம் தேதி காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மாலை 5.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் மின் அலங்கார ஆடம்பர தோ் பவனி நடைபெறுகிறது.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க