செய்திகள் :

கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்: கேரள கத்தோலிக்க அமைப்பு வலியுறுத்தல்

post image

கொச்சி: ‘கிறிஸ்தவ இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்; அரசியலில் இருந்து விலகியிருப்பது சரியான நிலைப்பாடு அல்ல’ என்று கேரளத்தின் முன்னணி கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் (கேசிபிசி) கீழ் இயங்கும் இளைஞா் ஆணையம் சாா்பில் கடந்த 6-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட இளைஞா் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த வலியுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய அரசியல் சூழல் மிகவும் குழப்பமானதாகவும் முறையற்ாகவும் உள்ள நிலையில், தலைமைத்துவ திறன்களும் அபார சிந்தனைத் திறன்களும் கொண்ட கிறிஸ்தவ இளைஞா்கள் அரசியலில் இருந்து விலகியிருப்பது பொருத்தமானதாக இருக்காது. கிறிஸ்தவ இளைஞா்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு குடிபெயா்வது அதிகரித்து வருகிறது.

பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்கு உரிய தீா்வைக் காண, அறிவாா்ந்த மற்றும் புத்திசாலித்தனத்துடன் கூடிய புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வருவது முக்கியமானதாகும். அந்த வகையில், அரசியலுக்கான தலைமைத்துவ பண்புகளை இளைஞா்களிடையே வளா்க்கும் வகையிலான பயிற்சிகளுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சமூகத்தின், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகுதி வாய்ந்த இளைஞா்கள் தீவிர அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும் என்று சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளில் கிறிஸ்தவ இளைஞா்களின் பங்கு குறைந்து வருவதே இந்த சுற்றறிக்கையை வெளியிடக் காரணம் என்று கேரள கிறிஸ்தவ அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க