செய்திகள் :

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

post image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பெயர்களை தவறாக உச்சரித்தார்.

அவர் பேசுகையில் "திரௌபதி முர்முவையும் ராம்நாத் கோவிந்தையும் நாட்டின் குடியரசுத் தலைவராக்கியது பற்றியே பாஜக எப்போதும் பேசிவருகிறது. நமது சொத்துகள், காடுகள், நிலம் மற்றும் நீர் ஆகியவற்றைப் பறிப்பதற்காக அக்கட்சி இதைச் செய்ததா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கார்கேவின் பேச்சு தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியுள்ளார்.

இது காங்கிரஸின் மரபணுவில் தலித் விரோத, ஆதிவாசி விரோத, அரசியல் சாசன விரோத மனப்போக்கு கலந்திருப்பதைக் காட்டுகிறது.

ராம்நாத் கோவிந்தை கோவிட் என்று கார்கே தனது உரையில் குறிப்பிட்டார். திரௌபதி முர்முவை முர்மா என்று அவர் உச்சரித்தார்.

மேலும் குடியரசுத் தலைவரை நில மாஃபியா என்றும் கார்கே குறிப்பிட்டார். சொத்துகளையும், காடுகளையும் மக்களிடம் இருந்து பறிப்பதற்காகவே திரௌபதி முர்மு குடியரசுத் தலைவரானதாகவும் அவர் தெரிவித்தார்.

திரௌபதி முர்முவுக்கும், ராம்நாத் கோவிந்துக்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கண்ட இரு தலைவர்களை அவமதித்தது மட்டுமின்றி ஆதிவாசி மற்றும் தலித் சமூகத்தினரின் உணர்வுகளையும் கார்கே காயப்படுத்தியுள்ளார்.

கார்கே தெரிவித்த கருத்துகளுக்காக காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக அக்கட்சித் தொண்டர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

காங்கிரஸும் கார்கேயும் மன்னிப்பு கேட்காவிட்டால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அது காங்கிரஸை பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ரிமோட் கன்ட்ரோல் சாதனத்தால் இயக்கப்படும் தலைவராக கார்கே இருக்கிறார். ராகுல் காந்தியின் தூண்டுதலின்பேரில் அவர் ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கார்கேவையும் காங்கிரஸையும் ஒட்டுமொத்த இந்தியா, ஆதிவாசி மற்றும் தலித் சமூகங்கள் ஆகியவை கண்டிக்கின்றன என்றார் அவர்.

தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகை தாக்கல்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவுக்கு எதிராக முதல் துணை குற்றப் பத்திரிகையை தில்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை த... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க