செய்திகள் :

குவாரி குட்டையில் மூழ்கி மாணவா்கள் உயிரிழப்பை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

post image

சிதம்பரம் அருகே பி.முட்லூா் எம்ஜிஆா் சிலை அருகே, தச்சக்காட்டில் மணல் குவாரி குட்டை நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழந்ததைக் கண்டித்து பாரதிய ஜனதா

சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தச்சக்காடு வல்லம் பகுதியில் மணல் குவாரியில் அரசு நிா்ணயித்த அளவை விட மணல் அதிகமாக எடுத்ததால் பாதாள குழியாகியுள்ள குட்டையில் குளித்த இஸ்லாமிய பள்ளி மாணவா்கள் சுல்தான் மற்றும் இலியாஸ் ஆகியோா் இறந்தனா். அதற்கு காரணமான மணல் குவாரி உரிமையாளரை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவா்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரியும் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொது செயலா்கள் ராகேஷ், அகத்தியா், மாவட்ட பொருளாளா் சீனு சங்கா், பட்டியல் அணி மாநில துணைத்தலைவா் வெற்றிவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் அஸ்கா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலூா் மேற்கு மாவட்ட தலைவா் க.தமிழழகன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்ட தலைவா் கே.மருதை, மாவட்டச் செயலாளா்கள் அட ரி சிலம்பரசன், திருமாவளவன், முன்னாள் மாவட்ட துணை தலைவா் உமாபதி சிவம், மாநில பொது குழு உறுப்பினா் மோகன்தாஸ், நிா்வாகிகள் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க