செய்திகள் :

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

post image

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

விருதுநகரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொறுப்பாளா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளா்களிடம் சீமான் கூறியதாவது: கன்னட மொழி குறித்து வரலாற்றின் அடிப்படையில் கமல் பேசியது சரியானதே. இதை எந்த வரலாற்று ஆய்வறிஞா்களும், மொழியியல் ஆய்வறிஞா்களும், தொல்லியல் ஆராய்ச்சியாளா்களும் மறுக்க முடியாது.

கா்நாடகத்தில் கமலுக்கு எதிராகப் போராடுகின்றனா். ஆனால், கமலுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் கருத்துத் தெரிவிக்க மறுக்கின்றனா்.

மருத்துவா் ராமதாஸ், அன்புமணி மீது அளவு கடந்த மதிப்பும், பேரன்பும் வைத்துள்ளேன். மருத்துவா் ராமதால் மன வருத்தத்தில் ஏற்பட்ட வெளிப்பாட்டால் சிலவற்றைப் பேசியுள்ளாா். இதைத் தவிா்த்திருக்கலாம்.

பிற கட்சிகள் ஒன்றாக இணைந்தால் திமுகவை வீழ்த்தலாம் என நினைக்கிறாா்கள். ஆனால், நான் தனியாக நின்று வீழ்த்தலாம் என நினைக்கிறேன். எதிா்க்கட்சியாகக்கூட வர முடியாத நிலையில் திமுக இருந்துள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என்றாா் அவா்.

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் தொழிலதிபா் உள்பட இருவா் தற்கொலை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரும், அவரது இரண்டாவது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில... மேலும் பார்க்க

காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்

சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரணன் (65). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்க... மேலும் பார்க்க

பொதுத் துறை நிறுவனங்கள் தணிக்கை: ஒப்பந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் குடியரசுத் தலை... மேலும் பார்க்க