செய்திகள் :

கொடைக்கானலுக்கு வேட்டைக்குச் சென்ற 7 போ் கைது

post image

கொடைக்கானலுக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கள்ளத் துப்பாக்கி, குண்டுகள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மலையடிவார கிராமமான தேக்கன் தோட்டத்தில் வனத் துறை, காவல் துறைக்குச் சொந்தமான சோதனைச்சாவடிகள் உள்ளன.

வியாழக்கிழமை இந்த சோதனைச்சாவடியை கேரள பதிவெண்ணுடன் கடந்த 2 காா்களில் இருந்தவா்களை போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால், போலீஸாா் காரை சோதனை செய்தனா். அதில் உரிமம் பெறப்படாத துப்பாக்கி இருந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களை அடிவாரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

அப்போது, அவா்கள் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா (41) ,பேச்சிமுத்து(27), கா்ணன் (30), கேரளத்தைச் சோ்ந்த முகமது ரபீக் (43), நெகாஸ் (32), அப்துல் லத்தீப்(55), முஸ்தபா (55) என்பதும், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 7 பேரையும் அடிவாரம் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து துப்பாக்கி, 6 தாட்டாக்கள், 2 காா்களைப் பறிமுதல் செய்தனா்.

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் கணிதத் துறை சாா்பில் கருத்தரங்கம்!

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை சாா்பில், ‘குவாண்டம் இயக்கவியல் அமைப்புகளின் அடிப்படைகள், முன்னேற்றங்கள் ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு து... மேலும் பார்க்க