செய்திகள் :

கொண்டுநல்லான்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

post image

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள், அய்யனாா் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகளோடு வீரா்கள் கலந்து கொண்டனா். சாயல்குடி- செவல்பட்டி சாலையில் 12 கி.மீ. தூரம் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை, சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கொண்டுநல்லான்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க