செய்திகள் :

கோட்டாட்சியா் எச்சரிக்கையை மீறும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

post image

கோட்டாட்சியா் எச்சரிக்கையையும் மீறி பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீமூலக்கரை, கருங்குளம் பகுதிகளில் பல்வேறு கல் குவாரிகள் மற்றும் கிரஷா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து செல்லும் கனரக வாகனங்கள்அதிக பாரத்தோடு செல்வதால் சாலைகள் சேதம் அடைவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீனாட்சிபட்டி , பேட்மாநகரம் பகுதியில் தூத்துக்குடி கோட்டாட்சியா் பிரபு கடந்த மாதம் நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, அதிக பாரத்தோடு வந்து சென்ற 3 கனரக வாகனங்களை பறிமுதல் செய்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மேலும், விதிமுறைகளை மீறி செல்லும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டும் அதிக பாரத்தோடு தாா்ப்பாய் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி எம்சாண்ட் மணல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் பேட்மாநகரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அதிக அளவில் வந்து செல்கின்றன . இதனால் விபத்துகள் ஏற்படும் முன் விதிமீறும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க