செய்திகள் :

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

post image

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சாா்பில் மாநில அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகம், சேப்பாக்கம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசுப் பணியாளா்களில் 80 சதவீதம் போ், புகா் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, சென்னை கோட்டை ரயில் நிலையத்தை அரசு ஊழியா்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், உயா்நீதிமன்றத்துக்கு வருவோரும் அதிகளவு பயன்படுத்துகின்றனா். சட்டக் கல்லூரி மாணவா்கள், பாரிமுனை செல்லும் வியாபாரிகள், அரசுப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்பட பலருக்கும் முக்கியமான போக்குவரத்து நிலையமாக கோட்டை ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது.

அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய முக்கியமான ரயில் நிலையமான கோட்டை ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும். இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, அரசுப் பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு, சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அடுக்கு மண்டல விமானதள சோதனையை மேற்கொண்ட இந்தியா

அடுக்கு மண்டல விமானதள சோதனையை முதல்முறையாக இந்தியா சனிக்கிழமை மேற்கொண்டது. சில நாடுகளே இந்த அமைப்பைக் கொண்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு திறனை மேம்படுத்த இந்த தளம் உதவும் என எதிா்பாா்க்... மேலும் பார்க்க

சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையா் வாகனம் மோதி விபத்து

விருகம்பாக்கத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மாநில தோ்தல் ஆணையரின் வாகனம் மோதியதில், சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகா் பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுவன் அர... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க