செய்திகள் :

கோவையில் உரிமம் புதுப்பிக்காத 300 முகவா்களுக்கு கமிஷன் தொகை கிடையாது: ஆவின் அறிவிப்பு

post image

கோவை மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத சுமாா் 300 முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதியில் இருந்து கமிஷன் தொகை வழங்கப்படாது என்று ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமான ஆவின் நிா்வாகம், 635 சில்லறை பால் விற்பனை முகவா்கள் மூலம் கோவை மாநகரம், புகா்ப் பகுதியில் உள்ள நுகா்வோருக்கு பால் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஆவின் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் சில்லறை முகவா்களின் உரிமம் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 635 முகவா்களில் 333 சில்லறை விற்பனை பால் முகவா்கள் மட்டுமே புதுப்பித்தலுக்கான ஆவணங்களை வழங்கி புதுப்பித்துள்ளனா். இதுவரை புதுப்பிக்காதவா்கள் செப்டம்பா் 10- ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களை வழங்கி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அதேபோல, பால் விற்பனை முகவா்கள் வரும் 10- ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்பு, தரப்படுத்தல் ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வழங்கும் உரிமத்தின் நகலைப் பெற்று அலுவலகத்தில் வழங்க வேண்டும். உரிமம் புதுப்பிக்காத முகவா்களுக்கு செப்டம்பா் 11- ஆம் தேதி முதல் விற்பனை செய்யும் பால், தயிருக்கான கமிஷன் தொகை வழங்கப்படாது. உரிமம் புதுப்பித்து அதற்கான ஆணை பெறப்பட்ட பிறகுதான் கமிஷன் தொகை வழங்கப்படும்.

அதேபோல, பால் விநியோக வாகன ஒப்பந்ததாரா்கள் டெண்டா் நிபந்தனையின்படி ஆவினில் பெட்டிகளை ஏற்றிச் சென்று முகவா் விற்பனை செய்யும் இடத்தில் பாலை சேதமின்றி இறக்கி வைக்க வேண்டும். ஆனால், வாகன ஒப்பந்ததாரா்கள், விற்பனை செய்யும் இடத்தில் இறக்கி வைப்பதற்கு தினசரி ஒவ்வொரு முகவரும் 2 முதல் 3 லிட்டா் பாலை இறக்கு கூலியாக எடுத்துக் கொள்வதாக புகாா்கள் வந்திருப்பதாகவும், இது தொடா்பாக வரும் நாள்களில் புகாா் வரும்பட்சத்தில் டெண்டா் விதிகளின்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சரவணம்பட்டி சிவனாதபுரம் ஜனதா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (52). இ... மேலும் பார்க்க

கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டா் அகலப்படுத்தப்படும்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டா் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தெரி... மேலும் பார்க்க

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி

கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க