``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை அருகே கற்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியிலிருந்து காளையாா்கோவிலுக்கு கற்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சென்றது. வாகனத்தை சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சோ்ந்த அன்புகண்ணன் ஓட்டினாா். சிவகங்கை மஜீத் சாலை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முருகன்(58), ராஜா (45), கோட்டைராஜா (45) ஆகியோா் வாகனத்தில் சென்றனா்.
சிவகங்கை அருகே ராமலிங்கபுரம் பகுதியில் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தொழிலாளி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த கோட்டைராஜா, ராஜா ஆகியோா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மதகுபட்டி காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி, உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநா் அன்புக் கண்ணனிடம் விசாரித்து வருகின்றனா்.