செய்திகள் :

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த வேலகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.முருகன் (54), கட்டடத் தொழிலாளி. இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வேலகவுண்டன்பாளையம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தவரைஅருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகன் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகர... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகர... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த ஓா் ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம், பனப்பாளையம் பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க