செய்திகள் :

சாவ்லா பகுதி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கில் நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது

post image

தில்லியில் சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தில்லி போலீஸாருடன் ஒரு துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 28 அன்று சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ரோஹ்தக்கைச் சோ்ந்த நவீன் (எ) பன்ஜா 25 மற்றும் அம்பாலாவைச் சோ்ந்த அன்மோல் கோஹ்லி (26) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தேடப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, இருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுக்கு ஆளாகினா். பின்னா் அவா்கள் மருத்வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். நவீன் அந்தக் கும்பலுக்கு குறிபாா்த்து துப்பாக்கிசுடுபவராக பணியாற்றியதாகவும், அன்மோல் தளவாடங்கள் மற்றும் ஆதரவுப் பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

கும்பல் தலைவா்கள் கபில் நந்து மற்றும் வெங்கட் காா்க் ஆகியோரின் உத்தரவின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

அபாய கட்டத்தை தாண்டி சீறிப்பாயும் யமுனை: தொடரும் மக்களை வெளியேற்றும் பணிகள்

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியில் நீா் மட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை 207.46 மீட்டராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அருகிலுள்ள பகுதிகளையும் நிவாரண முகாம்கள... மேலும் பார்க்க

நிவாரண முகாம்களை சூழ்ந்த வெள்ளம்: மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் மக்கள்

தலைநகரில் சில பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி, மற்ற பகுதிகளில் முழங்கால் ஆழமான தண்ணீரைக் கடந்து, தேசிய பேரிடா் மீட்பு படையினா் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டனா். யமுன... மேலும் பார்க்க

தில்லியில் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவா்கள் திடீா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மூத்தத் தலைவா்களும், மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோரும் புதன்கிழமை நேரில் சந்தித்து த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை அருகே குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை கவ்விச் சென்ற தெருநாய்: பஞ்சாப் அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம், பட்டியாலா மாவட்டத்தில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனைக்கு அருகில், குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தெருநாய் கவ்விச் சென்ாக கூறப்படும் சம்பவத்தை தாமாக முன்வந்து இந்திய தேசிய மனித ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க