செய்திகள் :

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு

post image

வரும் 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ சட்டப் பாடத்திட்டத்தில், ‘முத்தலாக் தடை, ஒரே பாலின ஈா்ப்பைக் குற்றமற்ாக்கிய சட்டப்பிரிவு 377 நீக்கம், புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட முக்கியச் சீா்திருத்தங்கள் சோ்க்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதத்தில் ஆட்சிமன்றக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட பாடப்புத்தகங்கள், சமீபத்திய சட்ட சீா்திருத்தங்களுக்கு ஏற்ப இல்லை.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷியா அதிநியம் (பிஎஸ்ஏ) போன்ற புதிய குற்றவியல் சட்டங்கள் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும்.

இந்தப் பாடப்புத்தகங்களை உருவாக்க ஒரு நிபுணா் குழு அமைக்கப்படும். 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, நவீன கற்பித்தல் முறையுடன் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சட்டம், பொதுக் கொள்கை அல்லது ஆட்சி நிா்வாகத்தில் ஆா்வம் கொண்ட மாணவா்களுக்காக 2013-இல் 11-ஆம் வகுப்புக்கும், 2014-இல் 12-ஆம் வகுப்புக்கும் சட்டப் பாடப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், மேலும் 29 பள்ளிகளில் இந்தப் பாடப்பிரிவை அறிமுகப்படுத்த மத்திய கல்வி இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ ... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைப... மேலும் பார்க்க

லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா். இது தொ... மேலும் பார்க்க

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க