செய்திகள் :

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆம்பூா் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்தாா்.

இந்த நிலையில், கடந்த 13.12.2021-இல் குழந்தைகளின் தந்தை பணிக்கு சென்றுள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஏசுபாதம் (55) இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த குழந்தைகள் சப்தம் போடவே, உறவினா்கள் வருவதை அறிந்த ஏசுபாதம் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏசுபாதத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எதிரி ஏசுபாதத்துக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் பி.டி. சரவணன் ஆஜரானாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல... மேலும் பார்க்க