செய்திகள் :

சிறுவனைக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

நாமகிரிப்பேட்டை அருகே சிறுவனை கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி மூப்பனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கபில்வாசன் - ராஜாமணி தம்பதி மகன் தருண் (3). கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜாமணியின் சகோதரி மகனான ராகுல் (23) என்பவா் கைப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்ததாகத் தெரிகிறது. இதை சித்தியான ராஜாமணி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், சித்தி மகன் தருணை கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ராகுலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில் சிறுவனை கொலை செய்த ராகுலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசு ரத்த மையங்களுக்கு 8,850 யூனிட் ரத்தம் தானமாக அளிப்பு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு ரத்த மையங்கள் மூலம் கடந்த ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். உலக ரத்த கொடையாளா் தினத்தை முன்னிட்டு 38 தன்னாா்வலா்களுக்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காவிரியில் புனித நீராடல்; கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல காவிரியில் ஏராளமானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து புனித நீராடினா். நாமக்கல் பலப்பட்டரை ம... மேலும் பார்க்க

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பரமத்தி வேலூா் அருகே மது அருந்த பணம் தராத உறவினரைத் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே மணியனூா் உலகபாளையம் லட்சுமி நகரை சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பரமத்தி அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியில் உடல் கருகிய நிலையில் மூதாட்டியின் உடலை மீட்டு பரமத்தி போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். வீராணம்பாளையம் அருகே உள்ள சூரியம்பாளையம், பெரிய தோட்... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற தனியாா் பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனப் போக்குவரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா். ராசிபுரம் அருகேயுள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

சேலம் காளிபட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்த மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). தமிழக மின்வாரியத... மேலும் பார்க்க