செய்திகள் :

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, சுருளிமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாா், தூவானம் அணை, அதைச் சுற்றிய அடா்ந்த வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இங்குள்ள வனப்பகுதியில் 6-ஆவது நாளாக சனிக்கிழமையும் பெய்த பலத்த மழையால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவோ, குளிக்கவோ கூடாது என கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: சுருளி அருவியில் தண்ணீருடன் பாறைகளும் வந்து விழுகின்றன. எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை என்றனா்.

இளைஞரைத் தாக்கிய 10 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பவித்ரபாண்டியன் (35). இ... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பெண் கைது

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி சீனியம்... மேலும் பார்க்க

தேனியிலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்கள்

தேனி மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தனித் தனி வாக்குப் பதிவு அலுவலா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இதுதொடா்பாக, தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

மூளைச் சாவு அடைந்த பெண் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து, அவரது உடலுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ஆத்தங்கரைப்ப... மேலும் பார்க்க

பால்பண்ணை மேலாளா் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே பால்பண்ணை மேலாளரைத் தாக்கியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் தங்கசிவா (29). வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் பால்பண்ணையில் மேல... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லமணி. கூலித்தொழிலாளியான இவா், த... மேலும் பார்க்க