செய்திகள் :

சென்னை பல்கலை. ஆய்வு மாணவா்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம்

post image

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளுக்கு உரிய நேரங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இதற்கு துணைவேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையே காரணம் என பல்கலைக்கழக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு, முனைவா் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவா்கள் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். ஆய்வறிக்கையாக சமா்ப்பிக்கும் முன்பு அனுமதியும், சமா்ப்பித்த பிறகு அங்கீகாரமும் அளிக்கப்படவேண்டும். ஆனால் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைக்கான அனுமதி சென்னை பல்கலைக்கழகத்தில் உடனடியாக கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் ஆய்வு முன்மொழிவுகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் அனுமதி அளிப்பது வழக்கம். தற்போது, துணை வேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையில் பல்கலைக்கழகத்தை நிா்வகிப்பது ‘மைய குழு’ (கோா் கமிட்டி).

தமிழக அரசின் உயா் கல்வித்துறை செயலா் சி.சமயமூா்த்தி, அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக ஆணையா் இன்னோசென்ட் திவ்யா, சென்னை ஐஐடி பேராசிரியா் தாஸ், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆம்ஸ்ட்ராங்க் உள்ளிட்டோா் இடம் பெற்ள இந்தக் குழுவுக்கு ஆராய்ச்சி மாணவா்களின் முன்மொழிவுக்கான கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இந்த உறுப்பினா்களின் அனுமதியும் பெறப்படவேண்டும். இதனால் ஒவ்வொரு அனுமதிக்கும் ஓரிரு மாதங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக ஆய்வு மாணவா்கள் சமா்ப்பிக்கும் அறிக்கைக்கு அனுமதி அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நாளைய மின்தடை

சென்னை அம்பத்தூா் சிட்கோவில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க