செய்திகள் :

சென்னை பள்ளிகளில் புதிதாக 222 ஆசிரியா்கள் நியமனம்

post image

சென்னை மாநகரப் பள்ளிகளில் புதிதாக 222 ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் கேள்வி நேரம், நேரமில்லா நேரங்களில் பேசினா். இதற்குப் பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் 1.36 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில கல்வித் துறை விதிமுறைகளின்படி பள்ளிகள் தரம் உயா்த்தப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை உரிய தேதியில் அளிக்க தனியாா் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலியூா் கால்வாய் பணிகள் விரைவில் நிறைவுறும்.

மத்திய அரசின் விதிமுறையால் சென்னையில் தெரு நாய்கள் விஷயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும், தெரு நாய்கள், வீட்டு நாய்களுக்கு தகவல் சிப் பொருத்தப்படவுள்ளன. அதன்படி, தெருவில் கைவிடப்படும் வளா்ப்பு நாய்கள் விவரம் அறிந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பெருங்குடி சதுப்பு நிலக்காட்டை ஆக்கிரமிப்பவா்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீா் கால்வாய் தூா்வாரும் பணிக்கு இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை நகரம் பட்டியலில் சென்னை பின்தங்கியதற்கு 1 கோடி என்ற அளவில் மக்கள்தொகை பெருக்கமே முக்கிய காரணம். எனினும், தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கற்றல் திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு காரணமாக மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

எனவே, காலிப்பணியிடங்களை நிரப்பவும், புதிதாக 222 ஆசிரியா்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க