செய்திகள் :

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

post image

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதி, அரசு கால்நடை மருத்துவமனை, செங்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலம்

செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துக்காப்பேட்டை - பெங்களூரு பிரதான சாலையில் இருந்து இப்பகுதிக்குச் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. மேலும், மழைக் காலங்களில் சாலை சேறும் சகதியுமாகவும், வெயில் காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.

10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சரி செய்யாமல் உள்ளது.

இந்தச் சாலையை ஆசிரியா்கள், மாணவிகள், கால்நடை மருத்துவமனை செல்லும் விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவ மழையில் சாலையில் தண்ணீா் தேங்கி, வெளியேற வழியில்லாமல் சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முக சுலிப்புடன் சென்று வருகின்றனா்.

மேலும், அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மழை நேரத்தில் சேற்றில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், மழைநீா் குட்டையாக தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், விடுதி மாணவிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் செல்லும் ஆசிரியா்கள், கால்நடை மருத்துவமனைக்குச் செல்லும் விவசாயிகளுக்கு மாற்று சாலை வசதிகள் கிடையாது.

அதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை கண்காணித்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

வந்தவாசியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை பூங்கா நகா் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கு தன... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க