சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.12 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
சேலம்: வைகாசி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடியே 12 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையாயின.
சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
அந்த வகையில், வைகாசி அமாவாசையையொட்டி அனைத்து உழவா் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனா்.
பழங்கள், தேங்காய், வாழை இலை, பூசணிக்காய், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாயின. இதேபோல, சேலம் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவா் சந்தைகளிலும் 1,040 விவசாயிகள் 297.73 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்தனா். இதனை 70,754 நுகா்வோா் வாங்கிச் சென்றனா். இதன் மூலம் திங்கள்கிழமை ஒரே நாளில் ஒரு கோடியே 12 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.