செய்திகள் :

சேலம்: விசாரணைக்கு வந்த முதியவர் திடீர் மரணம்; காவல்நிலையத்தில் நடந்தது என்ன?

post image

சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் கோட்டை பகுதியில் உள்ள என்.ஜி.ஜி.ஓ பில்டிங்கில் அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி (65) என்பவர் பணியாற்றி உள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதன்பின் துரைசாமி வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்திற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் வீரசம்பு, நேரில் துரைசாமியைப் பார்த்துள்ளார்.

மரணம்

ஏன் பணம் தரவில்லை என்று கேட்டு வீரசம்பு, துரைசாமிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீரசம்பு ஆட்டோவில் வைத்து துரைசாமியை, சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு துரைசாமி வந்தபோது, காவல் நிலைய வளாகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். அப்போது விசாரணையில், துரைசாமி இருசக்கர வாகனத்தில் திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டு, எழுதி தர சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென துரைசாமி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், துரைசாமி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு உறவினரும் ஒப்படைக்கப்பட்டது.

police
காவலர்

மேலும் துரைசாமி உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், திடீரென மயக்கம் போட்டு துரைசாமி விழுந்ததாகவும், பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகய்ஜ் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: ஒரு வங்கிக்கணக்கு விலை ரூ.7000; ஏழைகளிடம் வங்கிக்கணக்கை வாடகைக்கு வாங்கி மோசடி செய்த கும்பல்

சமீபகாலமாக இணையத்தளக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் தருவதாகவோ அல்லது பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் கைது எனப் பல்வேறு வழிகளில் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களிடம் பணத்தைப் பறித்து வருகின்றனர். இ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல்; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்திலிருந்து மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையம் வந்த குஷிநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் கழிவறைக்குள் இருந்த குப்பை தொட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது ஒரு குப்பை த... மேலும் பார்க்க

Cyber Crime: வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழ்; திறந்து பார்த்ததால் ரூ.2 லட்சத்தை இழந்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழைத் திறந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்குள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் வசிக்கும் அரசு ஊழியர் சுக்ராம் ஷிண்டே என்பவருக்கு அ... மேலும் பார்க்க

SBI வங்கியில் ரூ.2000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு நெருக்கமான இடங்களில் CBI ரெய்டு

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன் மற்றும் ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி க... மேலும் பார்க்க

திருப்பூர்: போன் செயலியில் கிடைத்த நட்பு; ரூ.92,000-ஐ பறிகொடுத்த இளைஞர்; 4 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரைண்டர் என்ற செல்போன் ஆஃப் மூலம் சபரிராஜன் என்பவரிடம் பழகி உள்ளார். இந்நிலையில், அந்த இளைஞரைத் தனிமையில் சந்த... மேலும் பார்க்க

சென்னை: உடன் பழகிய இளைஞருக்குத் திருமணம்; திருநங்கை செய்த விபரீத செயல்; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜித்,(30). இவர் சென்னை, மதுரவாயிலில் தங்கி, வானகரத்திலுள்ள அவரின் தாய் மாமாவின் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அஜித்துக்கும்... மேலும் பார்க்க