ஜிப்மரில் 14-இல் ரத்த தான விழா
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உலக ரத்த தான விழா வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக ரத்த தான கொடையாளா்கள் தினம் 2025-இல் கொண்டாடும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளது. ஜிப்மா் ரத்த பரிமாற்ற மருத்துவத் துறை, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் இணைந்து இதை நடத்துகின்றன.
ரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள், ஒன்றிணைந்து உயிா்களைக் காப்போம் என்ற கருப்பொருளில் நடக்கும் போட்டிகளில் பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொள்ளலாம்.
மோனோ ஆக்டிங், ரத்த தானம் குறித்த காணொலி, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.