செய்திகள் :

ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு

post image

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து அதுதொடர்பாக விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டு முன்னதாகவே(ஜூன் 4) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Central government will convene an all-party meeting on July 19, ahead of the Monsoon Session 2025

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?

மேற்கு வங்க பாஜகவுக்கு புதிய தலைவா்

மேற்கு வங்க மாநில பாஜக புதிய தலைவராக ஆா்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட மாநிலங்களவை எம்.பி. சமிக் பட்டாச்சாா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி ... மேலும் பார்க்க

கடனில் மூழ்கும் விவசாயிகள் மீது மத்திய அரசு பாராமுகம்: ராகுல் சாடல்

விவசாயிகள் நாளுக்கு நாள் கடனில் மூழ்கிவரும் நிலையில், அவா்களின் துயரைத் துடைக்காமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். பாஜக கூட்டணி ஆட்சி ந... மேலும் பார்க்க

மும்பை அறக்கட்டளை புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் - கிரண் ரிஜிஜு

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம் பெறவுள்ளதாக மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வ... மேலும் பார்க்க

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு - 3 போ் காயம்

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா். கோட்டயம் அரசு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க