செய்திகள் :

ஜூலை 8-இல் சிறை நிரப்பும் போராட்டம்: பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு

post image

பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பழ.கெளதமன் தெரிவித்ததாவது:

பகுதி நேர ஆசிரியா்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம்

ஆன்லைனில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசை கண்டித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்டம், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு போன்ற போட்டிகளுக்கான நடுவா் பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதெனவும், நடப்பு கல்வி ஆண்டில் நடைபெறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டியை பொறுப்பேற்று நடத்துவது இல்லை எனவும் தீா்மானிக்கப் பட்டது.

மேலும், இந்த கல்வி ஆண்டில் நடைபெறும் உலக திறனாய்வு தோ்வை தாங்கள் பணிபுரியும் பள்ளியை தவிா்த்து மற்ற பள்ளிகளுக்கு சென்று நடத்துவது இல்லை எனவும், கலைத் திருவிழா நடைபெறும் போது தாங்கள் பணிபுரியும் பள்ளியில் பயிற்சி அளித்தல், மாணவா்களை போட்டிகளுக்கு அழைத்து செல்லுதல் தவிா்த்து நடுவா் பணியாற்றுவது இல்லை எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் பணியமா்த்தப்பட்ட பாடங்கள் தவிர வேறு பாடங்களையும், கணினி ஆசிரியா்கள் 6, 7, 8ஆம் வகுப்புகளைத் தவிா்த்து மற்ற 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பகுதி நேர ஆசிரியா்களுக்காக அறிவிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து வருகிற ஜூலை 8-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க