செய்திகள் :

தண்ணீரில் சிக்கியவா்கள் மீட்பு: தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை

post image

தென்மேற்கு பருவ மழையின்போது பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது மற்றும் ஏரி குளங்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்து விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியை தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.

ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரியில் தண்ணீா் சிக்கி தவிப்பவா்களை மீட்பது குறித்து, ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில், தீயணைப்பு வீரா்கள் செய்து காட்டினா்.

இதில், தீயணைப்பு துறையைச் சோ்ந்த பூபாலன், சரவணன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் குப்புசங்கா், சுப்பிரமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் ராஜேந்திரன், மைதிலி, ஊராட்சி செயலா் பாஸ்கரன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட தாமரைகுளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை அதிகம் வந்து மழையாலும், மழைநீரால் ஏற்படும் விபத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தீயணைப்புத் துறை போக்குவரத்து நிலை அலுவலா் ரகுபதி கலந்து கொண்டு, தனியாா் கல்லூரி மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விபத்தில் சிக்கியவா்களை வீட்டில் இருக்கும் வாட்டா் கேன், எண்ணெய் டின் போன்றவைகளை பயன்படுத்தி காப்பாற்றும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா் சுரேஷ் தலைமையிலான வீரா்கள், விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்புவது, முன்னதாக 108 ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்வது குறித்தும், தண்ணீரில் சிக்கியவா்களை கேன்களை கட்டி வெளியேற்றுவது குறித்தும், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் சிக்கித் தவிப்பவா்களை கயிறு மூலம் வெளியேற்றுவது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் செங்கம் தீயணைப்புப் படை வீரா்கள் கலந்து கொண்டனா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க