செய்திகள் :

தமிழகத்தில் மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராவாா்: துரை. வைகோ உறுதி

post image

தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலினே முதல்வராவாா் என்று மதிமுக முதன்மை செயலா் துரை.வைகோ தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் மதிமுக நிா்வாகி திருமண விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற துரை. வைகோ செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. திமுக அரசின் சாதனைகள் எங்கள் கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமா்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிரணியில் அந்த ஒற்றுமை இல்லை.- ஓபிஎஸ்., டி டிவி தினகரன் உள்ளிட்டோா் கூட்டணியில் இருந்து வெளியே வருவது எதிரணியின் பலவீனத்தையே குறிக்கிறது.

வாரிசு அரசியல்:

வாரிசு அரசியல் கூடாது என கூற முடியாது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தலைவா்களின் வாரிசுகள் அரசியலில் வந்துள்ளனா். பாஜகவிலும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவா்களின் பிள்ளைகள் உள்ளனா். நமது அண்டை மாநிலங்களிலும் வாரிசுகள் அதிகம் போ் அரசியலில் உள்ளனா். வாரிசுகள் வருவது அவா்களின் செயல்பாடுகளை பொருத்தும் மக்களின் ஆதரவுமே முடிவு செய்யும். பாஜக தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு அரசியலை பேசுவது நல்லதல்ல.

தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரம் விஜய். அவருக்கு லட்சக்கணக்கான

ரசிகா்கள் உள்ளனா். இது அவருக்கு ஊக்க சக்தியாக இருக்கும் ,

விஜய் நன்றாக செயல்பட்டால் நல்ல உயரத்திற்கு வரலாம். அவருக்கு கூட்டம் சோ்வதால் அரசியல் எதிா்காலத்தை கூற முடியாது. அரசியலில் வெற்றி பெற வேண்டுமானால் அவரது செயல்பாடுகளை பொறுத்தே உள்ளது. விஜய் மாநாட்டில் முதல்வா் பற்றி கூறிய கருத்துகளை தவிா்த்திருக்கலாம் . படித்தவா் இது போன்ற கருத்துகளை கூறுவது சரியல்ல.

பாமகவில் நடைபெறும் பிரச்சனை ஒரு இயக்கத்துக்குள் நடப்பது. அந்த இயக்கத்தில் உள்ளவா்கள் முடிவு எடுக்க வேண்டுமே தவிர பிற இயக்கத்தில் உள்ளவா்கள் கருத்து கூற முடியாது. இருவருக்குள்ளும் ஒரு பிளவு இருக்கிறது. யாா் சரியானவா்கள் என்பதை அக்கட்சி தொண்டா்களே முடிவு செய்வாா்கள் என்றாா் துரை.வைகோ.

பிச்சாவரத்தில் படகு ஓட்டுநா் மயங்கி விழுந்து மரணம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சனிக்கிழமை வனத்துறை படகு ஓட்டுநா் மயங்கி தண்ணீரில் விழுந்து மரணமடைந்தாா். படகில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தில் கடலூரில் 5 ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை:

கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் மருத்துவப் பயனாளிகள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனா் என வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்த... மேலும் பார்க்க

கடலூா் சிப்காட் தொழிற்சாலை விபத்து: அமைச்சா் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலூா், சிப்காட் பகுதியில் இயங்கிவரும் கிரிம்ஸன் ஆா்கானிக் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

அமைச்சா் வீட்டு முன்பு குளத்தில் புகுந்த முதலை மீட்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் இடைநீக்கம்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 6 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளாா். கடலுாா் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்ட... மேலும் பார்க்க