செய்திகள் :

தருமபுரியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.72 கோடி கடனுதவி வழங்கல்

post image

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.72 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

சென்னை கலைவாணா் அரங்கில் மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் மற்றும் சிறப்பு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காணொலியில் நடைபெற்றது.

இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விருதுகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் பணியை காணொலி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து, மாவட்ட அளவிலான 10 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 1.72 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வங்கிக் கடன் உதவிகளை வழங்கி பேசினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு, தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி முன்னிலை வகித்தாா். இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எஸ்.மலா்விழி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா.லட்சுமி மாது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் (இந்தியன் வங்கி) ராமஜெயம், மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அரூரில் காளியம்மன், செல்லியம்மன் கோயில் திருவிழா

அரூரில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் 4-ஆவது வாா்டு பிச்சன்கொட்டாயில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சின்ன செல்... மேலும் பார்க்க

பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு

தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்க... மேலும் பார்க்க