தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி
நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தொடங்கிவைத்தாா். பேரணி பப்ளிக் ஆபீஸ் சாலை, தம்பித்துரை பூங்கா, புதிய பேருந்து நிலையம், நாகை அரசு மருத்துவமனை, அண்ணா சிலை வழியாக மீண்டும் அவுரித்திடல் சென்றடைந்தது.
பேரணியில், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாடல் மூலம் போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சாலையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 50 வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசங்களையும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றவா்களுக்கு இனிப்புகளையும் எஸ்பி வழங்கினாா். 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனா்.