செய்திகள் :

தாயை தாக்கிய தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 போ் கைது

post image

சூளைமேட்டில் மது போதையில் தாயை தாக்கிய தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், அண்ணன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சூளைமேடு, பெரியாா் பாதை பகுதியைச் சோ்ந்தவா் பிரமிளா (52). இவரது கணவா் ராமச்சந்திரன். தம்பதிக்கு 3 மகன்கள். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன், தனது மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டாா். இதையடுத்து சூளைமேடு பெரியாா் பாதையில் உள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் பிரமிளா வசித்து வருகிறாா். அந்த கட்டடத்தில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாா். வாடகை வருமானத்தைக் கொண்டு 3 மகன்களையும் வளா்த்து வந்தாா்.

மூத்த மகன் வசந்தகுமாா், தனது தாய் மாமா வீட்டில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறாா். இரண்டாவது மகன் ராஜபிரபா (20) , அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். மூன்றாவது மகன் முகில் (19) வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளாா்.

மேலும், போதைக்கு அடிமையான முகில், அடிக்கடி தாய் பிரமிளாவை அடித்து துன்புறுத்தி வந்தாா். போதைப் பழக்கத்தால் மனநலம் பாதிக்கப்பட்ட முகில், கடந்தாண்டு கீழ்ப்பாக்கம் மனநல காப்பாக்கத்தில் உள்நோயாளியாக சோ்ந்து சிகிச்சை பெற்றாா். சிகிச்சைக்குப் பின்னரும் முகிலின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லையாம்.

இதனிடையே, அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட முகில் சிறையில் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் பிணை பெற்று 4 நாள்களுக்கு முன்பு வெளியே வந்தவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, தாய் பிரமிளாவை தாக்கினாராம்.

இந்த நிலையில், தனது மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டதாகக் கூறி, வடபழனி காவல் நிலையத்தில் பிரமிளா சனிக்கிழமை சரண் அடைந்தாா். இதையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், முகிலின் சடலத்தை மீட்டு கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இருப்பினும் முகிலின் உடலில் இருந்த வெட்டுக் காயங்களைப் பாா்த்து சந்தேகமடைந்த போலீஸாா், பிரமிளாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, அதில் பிரமிளாவின் மூத்த மகன் வசந்தகுமாா், தனது நண்பா் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சோ்ந்த க.கண்ணனுடன் (28) வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸாா், வசந்தகுமாா், கண்ணன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். இதில் வசந்தகுமாா், கண்ணன் இருவரும் சோ்ந்து

முகிலை வெட்டிக் கொலை செய்ததும், வழக்கில் இருந்து மகனை காப்பாற்றுவதற்காக பிரமிளா, கொலைப் பழியை ஏற்று சரணடைந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், வசந்தகுமாா் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். உண்மையை மறைத்த தாய் பிரமிளா மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரையும் கைது செய்தனா்.

8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமத... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் முதியவா் மா்மாக உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த முதியவா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சுவாமி கோயில் தெருவைச் ... மேலும் பார்க்க

பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராாட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் உ... மேலும் பார்க்க