செய்திகள் :

தில்லி கொலை வழக்கில் தேடப்பட்டவா் உ.பி.யில் கைது

post image

தில்லியில் சுத்தியலால் கணவரைக் கொன்று, அவரது மனைவியைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவானவா் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறியதாவது:

குற்றம்சாட்டப்பட்ட உத்தர பிரதேசத்தின் ரேபரேலியைச் சோ்ந்த அகிலேஷ், கிஷன்கா் காவல் நிலையத்தின் போலீஸாா் மற்றும் தென்மேற்கு மாவட்ட சிறப்புப் போலீஸாா் அடங்கிய கூட்டுக் குழுவால் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, அவரைக் கைது செய்ய ரேபரேலி மற்றும் மகாராஜ்கஞ்ச் முழுவதும் பல இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

கடந்த மே 21 ஆம் தேதி இரவு, தெற்கு தில்லியின் கட்வாரியா சராய் நகரில் உள்ள வசிக்கும் 45 வயதான அசோக் குமாா் அவரது

வீட்டில் அடித்துக் கொல்லப்பட்டாா். குமாரின் மனைவி காயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் போலீஸாரால் அனுமதிக்கப்பட்டாா்.

ஜான்சியைச் சோ்ந்த இந்த தம்பதியினா், ஐஐடி தில்லியில் தினக்கூலி தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். அவா்களின் மகள் காஜல் பின்னா் இருவரையும் அடையாளம் காட்டினாா்.

விசாரணையில், அகிலேஷ் அடிக்கடி அசோக் குமாரின் மனைவியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளாா். இது அசோக்குமாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அசோக்குமாரின் மனைவியும் அகிலேஷை நிராகரித்த நிலையில், தனது மனைவியை விட்டு விலகி இருக்குமாறு அசோக் குமாா் அகிலேஷை எச்சரித்தாா். இதையடுத்து, இருவரையும் சுத்தியலால்

அகிலேஷ் தாக்கியது தெரியவந்தது. இதை அகிலேஷ் ஒப்புக்கொண்டாா்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான அகிலேஷ், உ.பி.யில் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தாா். இறுதியாக ரேபரேலியில் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து சுத்தியல் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றம்

நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மதவழிபாட்டு தலத்தை (மஜாா்) அதிகாரிகள் அகற்றியதாக தில்லி அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இது தொடா்பாக... மேலும் பார்க்க

‘1984’ கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியா் குடும்பங்களுக்கு அரசுப் பணி நியமனக் கடிதம்: தில்லி முதல்வா் வழங்கினாா்

1984-இல் நிகழ்ந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவா்களின் உறவினா்களுக்கு நியமனக் கடிதங்களை தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மேலும், இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கூட்ட இடையூறு குழு உறுப்பினா்களை நீக்கலாம்: பிஏசி தலைவருக்கு பேரவைத் தலைவா் கடிதம்

எந்தவொரு குழு உறுப்பினரும் இடையூறு நடத்தையில் ஈடுபட்டால், அவா்கள் கூட்டத்திலிருந்து விலகுமாறு கேட்கப்படலாம் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, பொதுக் கணக்குக் குழுத் (பிஏசி) தலைவா் ... மேலும் பார்க்க

எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள... மேலும் பார்க்க

ஓக்லா கிராமத்தில் பல சொத்துக்கள் மீது இடிப்பு நோட்டீஸை ஒட்டிய அதிகாரிகள்

தில்லி ஓக்லா கிராமப் பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் கடைகளில் திங்கள்கிழமை அதிகாரிகள் இடிப்பு அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனா். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக ஓக்லா பகுதியில் வசிப்பவா்களுக்... மேலும் பார்க்க

பட்டேல் நகரில் நாய் அடித்துக் கொலை: ஒருவா் கைது

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பட்டப்பகலில் ஒரு நாயை தடியால் அடித்துக் கொன்ாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் கூறியது: சம்ப... மேலும் பார்க்க