செய்திகள் :

`தூய்மைப் பணியாளர்களை வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு!' - ஆதவ் அர்ஜுனா

post image

சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சென்னை மாநகராட்சியின் குறிப்பிட்ட மண்டலங்களைச் சேர்ந்த அரசு ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணி பாதுகாப்பு உட்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 'தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாரிடம் கொடுக்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகளை ஏற்க வேண்டும்' என்றெல்லாம் பேசினார் இன்றைய முதல்வர் அவர்கள்.

ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடும் தூய்மை பணியாளர்கள்

வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு

ஆனால் இப்போது, மாநகராட்சியின் பராமரிப்பு பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து, ஒருசிலர் பயனடைய ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு. போராடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள், முதியவர்கள் என்றும் பார்க்காமல் ஐந்து நாட்களாக வீதியில் போராடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று தொழிலாளர்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி வயிற்றில் அடித்து வருகிறது திமுக அரசு. சாமானிய மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றமான அரசு வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டு என்ன சமூகநீதியைப் பேசப்போகிறீர்கள்?. சமூக அநீதியை மட்டுமே ஆட்சியாக நடத்திவரும் அரசுக்கு எதிராகச் சென்னையில் போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், கழகத் தோழர்கள் ஆகியோரோடு நேற்று சந்தித்தோம்.

அடிப்படை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களோடு போராட்டக் களத்தில் பங்கேற்றோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், பணிப்பாதுகாப்பு உரிமைக்கும் சட்ட அடிப்படையிலும், ஜனநாயக களத்திலும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தோம்' இவ்வாறு கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச்சம்- பின்னணி என்ன?

பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நா... மேலும் பார்க்க

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன்... மேலும் பார்க்க

'தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுக்க கூட மனசில்ல...' - கொந்தளிக்கும் போராட்டக் குழு!

'பத்திரிகையாளர் சந்திப்பு!'சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஆறாவது நாளை எட்டியிருக்கிறது. இன்றுதான் அரசு சார்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் மே... மேலும் பார்க்க

"அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் SC, ST, சிறுபான்மையினர் ஒருவர் கூட இல்லை" - சு.வெங்கடேசன்

அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மை மற்றும் பெண்கள் ஒருவர் கூட இல்லை என்று மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "அரசு வங்கி... மேலும் பார்க்க

உ.பி. வெள்ளப் பாதிப்பு: "கங்கை உங்களைச் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லும்" - பாஜக அமைச்சர் பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், பாதிக்கப்பட்டவர்களிடம் கங்கை நதி உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்று சர்ச்சைக்குரிய வகையில் ... மேலும் பார்க்க