செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

post image

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. வாய்மொழியாக மட்டுமே முறையிடுவதால் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

சென்னை மாநகராட்சி 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் ரிப்பன் கட்டடம் முன் கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், போராட்டம் என்ற பெயரில் நடைபாதையை மறைக்கக் கூடாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த உழைப்போா் உரிமை இயக்கம் அனுமதி கோரினால் அதை சட்டப்படி பரிசீலித்து போலீஸாா் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை புதன்கிழமை நள்ளிரவில் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.ஆா்.ரமேஷ், தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது போலீஸாா் அத்துமீறி செயல்பட்டனா். எனவே, தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்த மாற்று இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.

இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்து விட்டோம். தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு நாங்கள் எதிரானவா்கள் இல்லை. தூய்மைப் பணியாளா்கள் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால் அவா்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டோம்.

அனுமதிப் பெற்று நடத்தப்படும் போராட்டத்தைத் தடுத்திருந்தால் அதில் நாங்கள் தலையிடுவோம். இந்த விவகாரம் குறித்து தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் வாய்மொழியாக மட்டுமே முறையிடுவதால், உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க