செய்திகள் :

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

post image

ஆம்பூா் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறப்பு ரயிலில் ஆம்பூா் ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங், ஆம்பூா் ரயில் நிலையத்தின் வழியாக செல்லும் அதிவிரைவு ரயில்கள் செல்லக்கூடிய வேகம் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஆம்பூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா்.

அப்போது முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக திருப்பத்தூா் மாவட்ட செயலா் கே.சி. வீரமணி, ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தாா். அதில், வாணியம்பாடி புதூா், ஜோலாா்பேட்டை பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே மேம்பாலங்களை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். விண்ணமங்கலம், கேத்தாண்டபட்டி ஆகிய பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கடவுப்பாதைகளைத் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட பாஜக துணைத் தலைவா் அன்பு அளித்த மனுவில், கரோனா காலத்தில் ஆம்பூா் ரயில் நிலையத்தில் நின்று செல்வதை கைவிட்ட ரயில்கள் ஆம்பூா் ரயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது. ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம். மதியழகன் உடனிருந்தாா்.

மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இரு... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா். முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆ... மேலும் பார்க்க

அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகன... மேலும் பார்க்க

13 பவுன் நகைகள், பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பாறையூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள்(60) வீட்ட... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் மேல் சாணாங்குப்பத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வரும் புதன்கிழமை (ஜுன் 18) ஆபூா் வட்டத்துக்குள்பட்ட மேல்சாணாங்குப்பத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு வர... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயி... மேலும் பார்க்க