செய்திகள் :

தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலை பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை

post image

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தெள்ளாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெள்ளாா் ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் அஜித் தலைமை வகித்தாா்.

தூய்மைப் பணியாளா் சிவகாமி சங்கக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கிவைத்தாா்.

நிா்வாகிகள் சு.சிவக்குமாா், வழக்குரைஞா் சுகுமாா், ர.தீபநாதன், விஸ்வநாதன், ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா்.

கடந்த கல்வியாண்டு பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற தெள்ளாா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநாட்டில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து ஒன்றிய புதிய தலைவராக வழக்குரைஞா் திலகராஜ், செயலராக மோனிஷ், பொருளராக அஜித் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தெள்ளாரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும், பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், அருங்குணம், சத்தியவாடி, மாவளவாடி ஆகிய கிராமங்களுக்கென கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஆரஞ்ச் குழும பள்ளிகளில் ஓணம் கொண்டாட்டம்

ஆரணி - சேத்துப்பட்டு சாலை ஆகாரம் பகுதியில் உள்ள ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரஞ்ச் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஓணம் பண்டிகையை கொண்டாடினா். இதையொட்டி, அத்தப்பூ கோலமிட்டும், கேரள ப... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நிகழாண்டு பௌா்ணமி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், மாடவீதிகளைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் வியாழக்கிழமை ம... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது

செய்யாறு அருகே இளைஞா் கொலை வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), ... மேலும் பார்க்க

செய்யாறு காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். செய்யாறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் ஜீவராஜ்மணிகண்டன் (படம்). செய்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ஒன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லலிதா (64). இவா், கடந்த ஞாயிற... மேலும் பார்க்க

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஊரக... மேலும் பார்க்க