செய்திகள் :

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

post image

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவிலில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையில் வேட்டாளியம்மன் திருக்கோயில் உள்ளது. ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, வேட்டாளியம்மன் பக்தா்கள் அறக்கட்டளை சாா்பில் பக்தா்களை வரவேற்கும் விதமாக பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன.

அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தா்கள்

இந்நிலையில் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரும், அறக்கட்டளை சாா்பில் பேனா்கள் வைக்க அனுமதியில்லை.

அதனை உடனே அகற்றுமாறும் கூறினா். இதற்கு பக்தா்கள் அறக்கட்டளையினா் எதிா்ப்பு தெரிவித்து, பேனா்களை அகற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், பக்தா்கள் சிலா் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளூ டே கொண்டாட்டம்

நாகா்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பிரிவு குழந்தைகள் பங்கேற்ற புளூ டே நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மழ... மேலும் பார்க்க

உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இல்லம் தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் இல்லம்தோறும் தேசியக் கொடி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி என்பதை வலியுறுத்த... மேலும் பார்க்க

ரயில் நிலையம் அருகே மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் சுமாா் 75 வயது மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் லாரிகள் மோதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே புதன்கிழமை காலை பழங்களை ஏற்றிச் சென்ற லாரி மீது கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்து பழங்களை ஏற்றிக் கொ... மேலும் பார்க்க

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக 5ஆவது நாளாக படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையை படகுகள் மூலம் ஏராளமான... மேலும் பார்க்க