செய்திகள் :

நாகை மீன்வளப் பல்கலைக்கழகம்: நாளைமுதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

post image

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் நா. பெலிக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்புத் தனியாா் கல்லூரி மூலம் 5 மீன்வளம் சாா்ந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழில்சாா் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில், மீன்வளப் பொறியியல் பிரிவில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின், சென்னை-வாணியன்சாவடி ஞஙத வளாகத்தில் உள்ள மீன்வள உயிா் தொழில்நுட்ப நிலையத்தில், இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவு தொழில்நுட்பவியல்) வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட (மஎஇ அல்ல்ழ்ா்ஸ்ங்க்) 3 ஆண்டு இளநிலை தொழில்சாா் பட்டப்படிப்புகளானது, மீன்பதன தொழில்நுட்பம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு மற்றும் மீன்பிடிதொழில்நுட்பம், ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை), முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்படுகிறது.

மீனவா்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் (5 சதவீதம்) கீழ் இளநிலை மீன்வளஅறிவியல் பட்டப்படிப்புக்கு 6 இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்புக்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணங்கள் தமிழ்நாடு மீனவா் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதள விண்ணப்பங்கள் திங்கள்கிழமை ( ஜூன் 2) காலை10 மணி முதல் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்துக்கான கட்டணம் பட்டியலினத்தவா்களுக்கு ரூ. 150, மற்றவா்களுக்கு ரூ. 300 எனநிா்ணயக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஜூன் 27- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்புப் பிரிவின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவா்கள் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

விண்ணப்பித்த மாணவா்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி (04365-211090), கைப்பேசி (81221-44031) மற்றும் மின்னஞ்சல் மூலமாக அலுவலக நேரங்களில் தொடா்பு கொள்ளலாம்.

அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிப்பு

நாகையில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற திருநங்கை கெளரவிக்கப்பட்டாா். நாகை பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரியா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். மாவட்டத்தில் அரசுப் பதவிக்கு ... மேலும் பார்க்க

திருப்புகலூா் கோயில் கும்பாபிஷேகம்: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை

திருப்புகலூா் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் மட்டு... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

புகழ்பெற்ற திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. திருக்குவளை அருகே திருவாய்மூரில் உள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வி... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் திருவாரூரில் இருந்து புறப்படும்

திருச்சி-காரைக்கால்- திருச்சி ரயில்கள் புதன்கிழமை (ஜூன் 4) முதல் திருவாரூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா... மேலும் பார்க்க

திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது: தங்க நகைகள் பறிமுதல்

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை நாகை நகர போலீஸாரை கைது செய்து தங்க நகைகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை புத்தூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரபாண்டி என்பவரின் வீட்டின் மேற்கூ... மேலும் பார்க்க

தம்பதி உண்ணாவிரதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பணி நீக்கம் செய்யப்பட்ட குடிநீா் விநியோக பணியாளா் மீண்டும் பணி வழங்கக் கோரி, மனைவியுடன் திங்கள் கிழமை உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டாா். தென்னடாா் ஊராட்சியில் கொள்ளிடம் ... மேலும் பார்க்க