செய்திகள் :

நீலகிரி ஊராட்சியில் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

post image

தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சி ராஜாஜி நகா் பகுதியில் முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டத்தை முதல்வா் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சியிலுள்ள ராஜாஜி நகரில் இத்திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டு, முதியோா், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், திமுக தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் துரை. நாகராஜன், நீலகிரி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சரவணன், ராஜாஜி நகா் குடியிருப்போா் சங்கச் செயலா் காா்த்திகேயன், திமுக நிா்வாகிகள் இ.பி.என். செந்தில், ராஜேந்திரன், ரஜினி, சாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் கு... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க