செய்திகள் :

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

post image

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பாப்பாகுடி பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு போலீசார் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது, 17 வயது சிறுவன் வீட்டுக்குள் இருந்து அரிவாளை எடுத்து வந்து காவலர்களை வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக சிறுவன் மீது உதவி ஆய்வாளர் முருகன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சிறுவனின் உயிருக்கு ஆபத்தில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Police have opened fire on a 17-year-old boy who tried to attack a police SI in Tirunelveli.

இதையும் படிக்க : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

அரிசி கிடங்கில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய மனைவி ஆட்சியரிடம் ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேரன்மகாதேவி புத்தாரக்கடை தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பாலகிருஷ்ணன் (49), தொழிலாள... மேலும் பார்க்க

களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்க... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் மோதி குழந்தை பலி

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.வி.எம்.சத்திரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி பிரவீண். பெயின்டா். ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் விரட்டிய சிறுவா்கள் சுட்டுப்பிடிப்பு

முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவா்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனா்; அப்போது உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தாா்; மற்றொ... மேலும் பார்க்க