செய்திகள் :

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

post image

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள நூர்பூர் ஜட்டான் என்ற கிராமத்தில் பக்‌ஷிராம் என்பவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், அம்பேத்கரின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, உள்ளூர்வாசிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்தச் சிலையின் கைகள் உடைத்து சேதமாக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அம்பேத்கர் சேனையின் பொதுச் செயலாளர் குல்வாந்த் சிங் பூனோ என்பவர் மஹில்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இத்துடன், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான குர்பட்வாந்த் சிங் பன்னுன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவரது தூண்டுதலினால், அவரது கூட்டாளிகள் சிலர் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஹோஷியாபூர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குல்வாந்த் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சட்டப் பிரிவு 298 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தல் அல்லது தாக்குதல்) மற்றும் 61(2) (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் அவ்தார் சிங் கரிம்புரி, அம்மாநிலத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களாக பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு ... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவினா் ஒற்றுமையுடன் செயல்பட அமித் ஷா அறிவுரை!

‘கா்நாடக பாஜக தலைவா்கள் கடந்த கால கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்று கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளாா். கா்நாடக ப... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல: உச்சநீதிமன்றம்

உயா்நீதிமன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

காஸா, ஈரான் விவகாரத்தில் இந்திய அரசு மெளனம்: சோனியா காந்தி கடும் விமா்சனம்

காஸா, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நாட்டின் குரல் இழப்பையும், மாண்புகளைக் கைவிடுதலையும் குறிக்கிறது என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரை குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது: மும்பை உயா்நீதிமன்றம்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு விருப்பமின்றி கருவுற்றவரை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை பாதிப்புக்குள்ள... மேலும் பார்க்க