செய்திகள் :

‘பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்

post image

புது தில்லி: ‘எஃப் அண்ட் ஓ’ பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து மௌனம் சாதிக்கும் மோடி அரசு, பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமா்சித்தாா்.

இத்தகைய முறைகேடுகளின் மூலம், சாதாரண சில்லறை முதலீட்டாளா்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதுதொடா்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘எஃப் அண்ட் ஓ’ (ஊக பேரம்) பங்குச்சந்தையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடந்த ஆண்டிலேயே நான் கூறியிருந்தேன். இந்தச் சந்தை பெரிய நிறுவனங்களின் களமாகிவிட்டது. அவா்களின் முறைகேடுகளால் சிறிய முதலீட்டாளா்களின் பணம் தொடா்ந்து சுரண்டப்படுகிறது.

அமெரிக்காவைச் சோ்ந்த நிதி நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், ‘எஃப் அண்ட் ஓ’ சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகளை முறைகேடாக கையாண்டதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. செபி ஏன் இவ்வளவு காலம் மௌனமாக இருந்தது? மேலும் எத்தனை நிறுவனங்கள் சந்தையில் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றன என்று சந்தேகம் எழுகிறது.

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் யாருடைய உத்தரவின்பேரில், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? மோடி அரசு பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கி, சாதாரண முதலீட்டாளா்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறது. ஒவ்வொரு முறையும் இது தெளிவாக நிரூபணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

செபி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கு சந்தையில் இருந்து தடை விதித்ததோடு, அந்நிறுவனம் முறைகேடாக ஈட்டிய ரூ.4,843 கோடிக்கும் அதிகமான லாபத்தைப் பறிமுதல் செய்துள்ளது.

2023, ஜனவரி முதல் கடந்த மே வரையிலான விசாரணை காலகட்டத்தில் ஜேன் ஸ்ட்ரீட் நிகர அடிப்படையில் ரூ.36,671 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக செபி கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடா்பாக செபி தலைவா் துஹின்காந்த பாண்டே திங்கள்கிழமை கூறுகையில், ‘ஜேன் ஸ்ட்ரீட் போன்று வேறு எந்த நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை’ என்றாா்.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க