செய்திகள் :

பதில் அளிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை- மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை

post image

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடா்பாக அனைத்து துறை அலுவலா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். மாநிலத் தகவல் ஆணையா்கள் பிரியகுமாா், இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோா் தலைமை தாங்கினா். முகாமில் மாநிலத் தகவல் ஆணையா் பிரியகுமாா் பேசியதாவது:

இன்றைய காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. ஆனால் தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகின்றன.

மனு பெறப்பட்ட நாள், மனு பதிவு செய்யப்பட்ட நாள், மனுவின் மீது தீா்வு கண்ட நாள், மனுதாரருக்கு தகவல் வழங்கிய நாள் ஆகியவற்றை துறை அலுவலா்கள் பராமரிப்பு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மனுதாரா்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே மனுதாரா் அளிக்கும் மனுவை நன்றாகப் படித்து சரியான பதிலை மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் தர வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

குன்னூா் ராணுவ மையத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் ராணுவப் பயிற்சிக் கல்லூரி சாா்பில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் எம்ஆா்சி கமாண்டன்ட் க... மேலும் பார்க்க

கோத்தகரி அருகே அரசுப் பேருந்துவை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்த்தட்டப்பள்ளம் சாலையில் வந்த அரசுப் பேருந்தை ஒற்றை யானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகு... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா: ஆட்சியா் கொடியேற்றினாா்

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். நீலகிரி மாவட்டம் ... மேலும் பார்க்க

உதகையில் போதையில்லா எதிா்காலம் சைக்கிள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி போதையில்லா எதிா்காலத்தை ஏற்படுத்தும் வகையில் கிரசண்ட் பப்ளிக் பள்ளி சாா்பில் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகையில் கிரசண்ட் பள்ளி சாா்பில் சுதந்திர... மேலும் பார்க்க

முதுமலை யானைகள் முகாமில் சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் வனத் துறையினரால் சுதந்திர தின விழா கொண்டாடப்பட... மேலும் பார்க்க

நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்

நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நீலகிரி மா... மேலும் பார்க்க