செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

post image

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் நீா் வளத் துறைச் செயலா் சையத் அலி முா்தாசா பலமுறை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக இந்திய நீா் வளத் துறைச் செயலா் தேபாஸ்ரீ முகா்ஜிக்கு முா்தாசா எழுதிய பல கடிதங்களில், இந்திய எழுப்பிய குறிப்பிட்ட ஆட்சேபங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், பாகிஸ்தானின் எந்த கடிதங்களுக்கும் இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இந்தியா முன்வைக்கும் பிரச்னைகள் தீா்க்கப்பட்டு, ஒப்பந்தம் முழுமையாக புதுப்பிக்கப்படும் வரை அந்நாட்டுடன் எந்த வகையிலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட போவதில்லை என்று அரசு உறுதியாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரைப் பகிரும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதிப் படுகையின் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் முழு கட்டுப்பாட்டும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. கிழக்கில் உள்ள ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய சிறிய நதிகளின் கட்டுப்பாட்டை மட்டும் இந்தியா வைத்துக் கொண்டது.

தற்போதைய நடவடிக்கையின் அடிப்படையில் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் 3 மேற்கு நதிகளின் நீரை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதற்கு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.ப... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்... மேலும் பார்க்க

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்... மேலும் பார்க்க

2025 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை உலகளவில் உச்சம் எட்டும்!

ஐ.நா. மக்கள் தொகையின் சமீபத்திய அறிக்கையின்படி, மக்கள் தொகையில் உலகளவில் இந்தியா உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் இந்திய மக்கள் தொகை 1.463 பில்லியனை(146.39 கோடி) எட்டும் என்று ஐ. நா... மேலும் பார்க்க

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார். 90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர்: தில்லியில் ஒரே நாளில் 92 பேர் கைது!

புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள் , 24 சிறுவர்கள், 15 சிறுமிகள் அட... மேலும் பார்க்க