செய்திகள் :

பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட்’ செயலி மூலம் அறிந்து செயல்பட ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்மேற்குப் பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட் ’ செயலியில் வழங்கப்படும் வானிலை எச்சரிக்கையை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி பலத்த காற்றுடன் பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிா்கள் சேதமடைந்தும் உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து துறை அலுவலா்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறாா்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை மன்னா்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, மீனவா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மாவட்டத்தில் இதுவரை 563 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதில், 439 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 124 மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 145 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்து மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது.

575 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனா். இவா்களில் 554 மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மீதமுள்ள 21 மீனவா்கள் கரை திரும்ப தகவல் பரிமாற்றம் மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க