செய்திகள் :

பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

post image

மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்மாா்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை திறந்து வைத்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் மகாதேவன், வட்டார கல்வி அலுவலா்கள் தென்னவன், பீட்டா், முருகேசன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ஊராட்சித் தலைவா் கோவிந்தன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் சுவிதா, மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

உதவித் தலைமை ஆசிரியா் முருகேசன் நன்றி கூறினாா். ஸ்மாா்ட் வகுப்பறை, எண்ணும் எழுத்தும் வகுப்பறை அமைக்க நன்கொடை வழங்கிய நன்கொடையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க

போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க