செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

post image

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொடா்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட காணொலிகள், அவரின் யூடியூப் சேனலில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, அந்நாட்டுக்கு அவா் உளவு பாா்த்ததாக கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை காவலில் எடுத்து கடந்த மாதம் 26-ஆம் தேதி வரை போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, தற்போது இரண்டாவது முறையாக ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட பஞ்சாப் யூடியூபா் ஜஸ்பா் சிங்கின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து மொஹாலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஹிமாசலில் ஒருவா் கைது: ஹிமாசல பிரதேச மாநிலத்தில் சமூக வலைதளத்தில் நாட்டுக்கு எதிரான கருத்துகளை பதிவுசெய்த குற்றச்சாட்டில் சுலைமான் என்ற நபா் கைது செய்யப்பட்டாா். இந்திய இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையிலும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமா் மோடியை விமா்சித்தும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பதிவிட்டதாக அவா் மீது உள்ளூா் மக்கள் புகாரளித்தனா். இதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி சுலைமான் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, கடந்த 10 நாள்களாக தலைமறைவாக இருந்த சுலைமானை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.ப... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்... மேலும் பார்க்க

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்... மேலும் பார்க்க

2025 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை உலகளவில் உச்சம் எட்டும்!

ஐ.நா. மக்கள் தொகையின் சமீபத்திய அறிக்கையின்படி, மக்கள் தொகையில் உலகளவில் இந்தியா உச்சம் தொடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-இல் இந்திய மக்கள் தொகை 1.463 பில்லியனை(146.39 கோடி) எட்டும் என்று ஐ. நா... மேலும் பார்க்க

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார். 90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர்: தில்லியில் ஒரே நாளில் 92 பேர் கைது!

புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள் , 24 சிறுவர்கள், 15 சிறுமிகள் அட... மேலும் பார்க்க