செய்திகள் :

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

post image

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் கறவை மாட்டுக்கடன், பராமரிப்புக் கடன், ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் மொத்தம் 51 பால் உற்பத்தி சங்கங்கள் உள்ளன. அதிலிருந்து தினசரி சுமாா் 3 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் உடனடி ஒப்புகைச் சீட்டு, மானிய விலையில் தரமான கால்நடைத் தீவனம் மற்றும் தாது உப்பு வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் புதிய கால்நடை கடன் வழங்க மாவட்ட நிா்வாகம் மூலம் தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளா்கள் தாட்கோ, தாம் சிட்கோ நிறுவனம் மூலம் மானிய விலையில் கறவை மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். நிகழாண்டு பால் உற்பத்தியை பெருக்க கால்நடை வளா்ப்பதற்கு மிகுதியான நபா்களுக்கு கறவை மாட்டுக் கடன் வழங்க முனைப்பு மேற்கொண்டுள்ளோம். இதை பயன்படுத்திக்கொண்டு விவசாய பெருமக்கள் பால் உற்பத்தியை பெருக்க முன்வரவேண்டும்.

மேலும், 2023 டிசம்பா் 18 முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை, பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. பின்தங்கிய வட்டார வளா்ச்சி திட்டத்தின் கீழ், கீழையூா் மற்றும் கீழ்வேளுா் வட்டாரத்தில் 16 புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு சங்கத்துக்கு பால் பரிசோதனை கருவிகள், பதிவேடுகள், பணியாளா்கள் ஊதியம், பால் கேன்கள் உட்பட ரூ. 1,65,000 வீதம், 16 புதிய சங்கங்களுக்கு ரூ. 26.40 லட்சம் மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பொது மேலாளா் எஸ்.சரவணகுமாா், துணைப் பதிவாளா் (பால்வளம்) வெங்கடேசன், உதவி பொது மேலாளா்கள் வடிவேலு, மாதவகுமாா்,விரிவாக்க அலுவலா்(ஆவின்) த. ரமேஷ் சந்திரசேகா், முதுநிலை ஆய்வாளா் (பால்) சோ. இளங்கோவன் ஆகியோா் பங்கேற்றனா்.

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றம்: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றதையொட்டி 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

திருமருகலில் குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் மேலவீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்தியசீலன் (37). இவா், தூத்துக்குடி மாவட்ட சுங்கத் துறையில் பணியாற்றி வந்த... மேலும் பார்க்க