செய்திகள் :

பிகாரை குற்றத் தலைநகராக மாற்ற ஜேடியு-பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

post image

பிகாரை நாட்டின் "குற்றத் தலைநகராக" மாற்ற ஜேடியு-பாஜக கூட்டணி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பிகாரில் இரட்டை இயந்திர அரசு சட்டம் ஒழுங்கு நிலைமையை அழித்துவிட்டது. கடந்த ஆறு மாதங்களில், 8 தொழிலதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 முறை போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜேடியு-பாஜக கூட்டணி பிகாரை நாட்டின் குற்றத் தலைநகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

பிகாரில் வறுமை உச்சத்தில் உள்ளது. சமூக மற்றும் பொருளாதார நீதியில் நிலைமை மோசமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு தேக்கமடைந்துள்ளதால், முதலீடு வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.

இந்த முறை பிகார் பின்தங்காது, மாற்றம் நிச்சயம். இந்தியா கூட்டணி இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் பாட்னாவில் உள்ள பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா தனது இல்லத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கடுமையாகத் தாக்கி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், பாஜகவும் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை "இந்தியாவின் குற்றத் தலைநகராக" மாற்றியுள்ளனர் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

வரவிருக்கும் பேரவைத் தேர்தலில், அரசை மாற்றுவதற்கு மட்டுமல்ல, மாநிலத்தைக் காப்பாற்றுவதற்கும் என்று ராகும் வலியுறுத்தினார்.

ஹாஜிபூரில் தனது மகனை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்தவரால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Congress leader Mallikarjun Kharge accused the JDU-BJP alliance of making every effort to turn Bihar into the "crime capital" of the country.

குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்: கார்கே மீது பாஜக குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பு: இந்தியா வெற்றிகர சோதனை

நீண்ட தூர இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடிய நீா்மூழ்கி எதிா்ப்பு ராக்கெட் அமைப்பின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான கவராட்டியில் ஜூன் 23 மு... மேலும் பார்க்க

விமான கட்டண திடீா் உயா்வு பிரச்னை: தீா்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி

விமான கட்டணங்கள் திடீரென உயா்த்தப்படும் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது. மகா ... மேலும் பார்க்க

இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை

இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு மேற்கு வங்கத்தில் இருவா் கைது

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா். இவா்களில் ஒருவா் கொல்கத்தாவின் பவானிபூா் பகுத... மேலும் பார்க்க