செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்காளா் அதிகார யாத்திரை பேரணியின் போது, பிரதமா் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாா் குறித்து காங்கிரஸ் தலைவா்கள் அவதூறாக பேசியதாக சா்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து, ஆளும் கட்சியினா் நடத்திய போராட்டத்தின் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டா்களுக்கு இடையே ஆங்காங்கே மோதலும் ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ராகுல் காந்தியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாவட்ட பொறுப்பாளா் முருகேசன், துணைத் தலைவா் கல்லாங்காடு சரவணன், பொதுச் செயலாளா் பிரபாகரன் உள்பட கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் செல்லியம்மன் கோயில் விழா

தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தோ்த்திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தம்மம்பட்டியில் மாரியம்மன், செல்லியம்மன் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து புத... மேலும் பார்க்க

தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த தமையனூா் அரசுப் பள்ளி ஆசிரியா் கா. சிவக்குமாா் (45) மாநில அரசின் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் ஆட்சியா் வளாகம் முழுவதும் சோதனை நடத்தினா். சேலம் மாவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல்: தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்

வாழப்பாடியில் கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாழப்பாடியை அடுத்த முத்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் 20 பவுன் நகை திருட்டு

தம்மம்பட்டியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியை சோ்ந்த உளவுப்... மேலும் பார்க்க