செய்திகள் :

பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

post image

பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின் முன்னணி பாடகர் ஜான் மைக்கேல் ஓஸி ஆஸ்போர்ன் காலமானார். அவருக்கு வயது 77.

பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என்று அழைக்கப்பட்ட ஜான் மைக்கேல், சமீபத்திய காலங்களாக பல்வேறு நோய்களுடன் போராடி வந்தார். அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து அவரது குடும்பத்தினர் எந்தத் தகவலும் உறுதிபடுத்தவில்லை.

ஜான் மைக்கேல் மரணமடைந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார். இது வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத அளவுக்கு சோகமானது.

அவர் எங்களது குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். இந்த சோகமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுக்கு மரியாதை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

‘பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின்’ முன்னணி பாடகரான ஓஸி ஆஸ்போர்ன், அவரது குழுவில் அவரின் குரல் மிகவும் பிரபலமானதாக மாறியது. இவரது குரலில் அயர்ன்மேன், பாரனாய்டு, வார் பிக் போன்ற டிராக்குகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

20 ஆண்டுகளாக இசையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜான் மைக்கேல், மூன்று வாரங்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வமாக இசைக்குழுவில் இருந்து விலகினார். மீண்டும் ஜூலை 5 ஆம் தேதி இசைக்குழுவினருடன் இணைந்தார். அவருக்கு பிளாக் சப்பாத் சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது.

யுகே மியூசிக் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் யுஎஸ் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் இரண்டிலும் இரண்டு முறை கௌரவிக்கப்பட்டார் ஓஸி. அதனைத் தொடர்ந்து ஓஸியின் திறமைக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன.

அவற்றில் ஐவர் நோவெல்லோ விருது, 5 கிராமி விருதுகள், காட்லைக் ஜீனியஸ் விருது, கிளாசிக் ராக்கின் லிவிங் லெஜண்ட் பரிசு போன்றவைகளாகும். அதிலும், 12 முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அவருக்கு தெல்மா ரிலே, ஷரோன் என்ற இரு மனைவிகளும், ஐமி, கெல்லி, ஜாக், ஜெசிகா மற்றும் லூயிஸ் என்ற 5 குழந்தைகளும் உள்ளனர்.

Black Sabbath lead singer Ozzy Osbourne dies at 76, weeks after farewell show

இதையும் படிக்க :மோடியின் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் யாருக்கு சாதகம்?! கார்கள், விஸ்கி விலை குறையுமா?

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா் மீது ஒரு கும்பல் இனரீதியாக அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரு... மேலும் பார்க்க

பாதுகாப்பு: துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா

சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடா்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து துருக்... மேலும் பார்க்க

ஊழல் தடுப்பு சட்டம்: உக்ரைனில் போராட்டம்

உக்ரைனில் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துவதாக சா்ச்சையை எழுப்பியுள்ள புதிய சட்டத்துக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. சுமாா் மூன்று ஆண்டுகளுக்கு முன்னா் ரஷியாவ... மேலும் பார்க்க

அகதிகள் கடத்தல்: முதல்முறையாக பிரிட்டன் பொருளாதாரத் தடை

சட்டவிரோத இடம்பெயா்வை ஒடுக்குவதற்காக, அகதிகள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து பிரிட்டன் அரசு முதல்முறையாக உலகளாவிய பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை விதித்தது. இது குறித்து பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரி... மேலும் பார்க்க

ஜப்பானுடன் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

ஜப்பானுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தாா். இது குறித்து தனது ட்ரூத்... மேலும் பார்க்க

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க